புதன், 26 ஜூலை, 2017

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே

கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே

வெள்ளி, 27 மார்ச், 2015

சனி,ஞாயிறுகள் மற்றும் விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்கள் வந்தாலே என் நினைவுகள் என் மகள்களை சுற்றி இருக்கிறது. மகள்களை பெற்ற அப்பன்களுக்குதான் தெரியும் முத்தம் காமத்தில் சேராது.. ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற பாடல், ஆரிரோ, ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு போன்ற பாடல்களை திரும்ப, திரும்ப கேட்டுக்கொண்டு ஒருவித பித்தனாக, பித்து பிடித்த நிலையில் மனம் பரிதவித்து நாட்களை நகர்த்தும் வேதனையான காலங்கள். என் மகள்கள் என்னிடம் வந்துவிட வேண்டும் நான் போற்றி,பாதுகாக்க வேண்டும், என் அரவணைப்பில் வாழவேண்டும், தீய சக்திகளான தாயின் நிழல் கூட படியகூடாது என்று நிதமும் தவிக்கும்,தத்தளிக்கும் வேதனையான நாட்கள்.அப்பத்தா, அப்பா என்ற குரல் கேட்கவேண்டும் என்று அடிவயிற்றில் இனம் புரியாத வேதனை. இது என்னை நிலைகொள்ள வைக்காமல்,தடுமாற்றத்தை தந்து பல தோல்விகளை தரும் வலி தரும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. சாம்பவி என்னை காக்கவேண்டும்.சத்குருவே சரணம். கருப்பு கோவில், சமயபுரம் கோவில், இன்னும் பல கோவில்களில் என் வேண்டுதல்கள் நிறைவேற்ற காலம் கனியவில்லை.என் ஜீவன் ஓய்ந்துவிட்டது. வாடிவிட்டது. பாசிலின் பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்கவா.. பாடலை கேட்டு அழுது கொண்டு நாட்களை நகர்த்தும் வேதனைகள், தாளாது இதயமும் தன் துடிப்பை சிரமமாக செய்கிறது. எந்த பாடலை கேட்டாலும் என் பிள்ளைகள் நினைவு, எங்கே சென்றாலும், பிள்ளைகளை பார்த்தால் ஒருவித பரிதவிப்பு, ஏக்கம், துக்கம், வெளியே செல்ல பிடிக்காத நிலை ஏற்படுகிறது. சாம்பவி, சங்கரி என்னை காப்பாய் தேவி என்று தெய்வ வேண்டுதல்கள் உள்ளத்தில் தானாக விளைகிறது. எந்த தேவியும் என்னை காக்கவில்லை. 

ஆதாரம் வித்துவா(விந்து)? ஸ்ரோனிதமா?

காற்றில் வரும் கீதமே

படம்: ஒரு நாள் ஒரு கனவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், பவதாரினி, சாதனா சர்கம்
வெற்றிகரமாக நூறாவது பதிவு

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா 

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா 
அவன் வாய் குழலில் அழகாக ஆ... 
அமுதம் ததும்பும் இசையாக 
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து 

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா 
பசு அறியும் அந்த சிசு அறியும் 
பாலை மறந்து அந்த பாம்பறியும் 
பசு அறியும் அந்த சிசு அறியும் 
பாலை மறந்து அந்த பாம்பறியும் 
வருந்தும் உயிருக்கு ஆ.. 
வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும் 
இசை அருந்தும் முகம் மலரும் ஒரு அரும்பாகும் 
இசையின் பயனே இறைவன் தானே 

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா 
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா 
அவன் வாய் குழலில் அழகாக ஆ... 
அமுதம் ததும்பும் இசையாக 
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து 

ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன் 
அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன் 
ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம் 
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம் 

திறந்த கதவு என்றும் மூடாது 
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது 
இது போல் இல்லம் ஏது சொல் தோழி 

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா 
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா 
அவன் வாய் குழலில் அழகாக ஆ... 
அமுதம் ததும்பும் இசையாக 
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து
இப்பாடலின் வீடியோ இங்கே..

2 comments:

  1. This comment has been removed by the author.
    Reply
  2. ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
    அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
    இது பெண்களை உயர்த்த எழுத பட்ட தவறான கருத்து என நான் என் வாழ்க்கையின் கசப்பான, இருண்ட,கொடிய ஆபத்தான,தற்கொலைக்கு வலுகட்டாயமாக தள்ளும் பெண்ணை மனைவியாக பெற்று வாழ்ந்தவன் என்ற அனுபவத்தில் கருதுகிறேன். ஆதாரம் அன்னையா?, தந்தையா? ஆதி சக்தி என்று அம்மனை வணங்குகிறோம் என்ற அடிப்படையில் ஆதாரம் அன்னை,அவளே கரு சுமக்கிறாள்,அந்த கரு (தனக்கேற்ற) விந்துவை வரவழைத்து உயிரை உருவாக்கியது என்ற கருத்து விளைகிறது. இந்த அடிப்படையில் பார்த்தோம் என்றால் ஆண் உயிரின் விதை,வித்தை தாங்கும் ஆண் பெண்கள் சொல்லும் கருத்தை ஆமோதித்து ஆமாம் போடவேண்டும், வேறு வழி இல்லை, அமோதிக்காவிட்டாலும் பெண்ணே ஜெயிகிறாள் என்று விளைவு ஏற்படுகிறது.இது தற்போதைய நடைமுறையில் நடிபெற்று கொண்டு இருக்கும் தவறான செயல் ஆகும். ஆனால் ஏனோ இந்த தவறான நிலை நடைமுறை படுத்தபடுகிறது.ஆதாரம் அன்னை என்றால் அதற்கேற்ற லயம் தந்தை என்றால் அன்னையே எதையம் தீர்மானிக்கும் சக்தி, எந்த ஒரு செயலுக்கும் அன்னையே ஆதாரம், அன்னையின் எண்ணங்களை,செயல்களை தந்தை சிரமேற்கொண்டு,தான் சேமித்து வைத்து இருக்கும் சக்தியை எல்லாம் உபயோகித்து தாயின் எண்ணங்களை செய்து முடிக்கிறான் என்று பொருள் தருகிறது.
    ஆதாரம் தந்தை, அந்த ஆதாரத்தை தாய் தாங்கி நல்ல உயிரை உருவாக்கினாள் என்று சொன்னால் என்ன பிழை ஏற்படும்? ஆதாரம் தந்தையே என்று நான் கருதுகிறேன்.
    என் பிள்ளைகளை என்னிடம் இருந்து பிரித்து என் தந்தையை தீராத மன உளைச்சலுக்கு உள்ளாக்கி கொன்று, எங்கள் பெற்றோர் கடின உழைப்பால் சேர்த்த பல செல்வங்களை எல்லாம் நிர்மூலம் ஆக்கிய பெண்ணை ஆதாரம் என்றும் அதை செய்து முடிக்கும்(எதிர்த்தாலும் முடியாமல், தடுத்தாலும் முடியாமல், கெஞ்சினாலும் முடியாமல் நொந்து,தற்கொலை முயற்சி மேற்கொண்டு அழிவை தடுக்க முடியாமல் வலுகட்டாயமாக காரணமாக ஆக்கப்பட்ட நிலை) லயம நான் என்றும் பொருள் தந்தால் சரியாக இருக்கும்,இருக்கிறது என்று மக்கள் ஏற்றுகொள்ள விளைவர்.ஆனால் என் ஜீவன்களை, என் மகள்களை என்னிடம் இருந்து பிரித்துக்கொண்டு,என் செல்வங்களை(பணம்,பொருள்) திருடிக்கொண்டு வாழும் பெண் என் குழந்தைகளுக்கு ஆதாரம் என்றால் அதை எப்படி என்னால் ஏற்றுகொள்ள இயலும். என் குழந்தைகள் எனக்கே உரித்தானவை. குழந்தைகள் தந்தையின் சொத்து. தந்தையே முழு உரிமை உள்ளவன். அவனிடம் இருந்து குழந்தைகளை பிரித்து அதற்கு சட்டம், சமுதாயம் போன்றதை ஏமாற்றி துணைக்கு வைத்துகொண்டு பிழைக்கும் பெண்களை யாரும் போற்றகூடாது.. போற்றினால் ஜீவன் மோசமடையும், இயற்கை சீர்கேடு அடையும்.வளம் குன்றும். ஆகவே தந்தையை உயர்த்தி பாடல் எழுதவேண்டும். ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே என்ற கருத்தின் அடிப்படையில் பாடல் இருக்கிறது.ஆனால் குழந்தைகளை தாய் வளர்க்க கூடாது என்ற நிலையில் மட்டுமே இந்த ஆதாரம் தாய் என்ற கருத்தை எதிர்கிறேன்.நன்றி..

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

விவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன???

ஞாயிறு, டிசம்பர் 02, 2012


விவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன???



    இரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள "விவாகரத்து வழக்குகள்" குறித்தது. அதில், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவகாரத்து வழக்குகள் நிலுவையில்(மட்டும்); உள்ளன என்றும், பெரும்பாலும் "பெண்கள் தான் அதிகம்" விவகாரத்து கோருகின்றனர் என்ற புள்ளிவிவரமும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த செய்தியை படித்தவுடன், பல நாட்கள் என்னுள் உரையாடிக்கொண்டிருக்கும் விசயங்களில் ஒன்றான இந்த விவாகரத்து விசயமாய் ஓர் தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. கணவன், மனைவி இருபாலரும் தான் விவகாரத்து வழக்குகளுக்கு காரணம் எனினும் - பெண்கள் தான் அதிகம் விவாகரத்து கோருகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை ஆழ ஊடுருவ வேண்டும் என்று தோன்றியது. பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்/ கொடுமைக்கு ஆட்படுகின்றனர் என்று எண்ண தோன்றினாலும், உண்மை-நிலை அதுவல்ல. வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் தம்பதையர்களுள் வேண்டுமானால் - அதிகமான பெண்கள் அடக்கப்படுகின்றார்கள் என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால், மத்திய மற்றும் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்த தம்பதியர்க்குள் இந்த உண்மை முற்றிலும் மாறுபடுகிறது. மேலும், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோரில் மிகக் குறைந்தோரே - விவகாரத்து வரை செல்கின்றனர் என்பதே பேருண்மை; அவர்கள், சமுதாயம், நியாயம்/தர்மம் இவற்றை "இன்னமும்" நம்பிக்கொண்டிருப்பதால் வாழ்க்கையை சகித்து வாழ்கின்றனர்; அவர்களுக்கு விவாகரத்தை எதிர்கொள்ளும் சக்தியில்லை.

         ஆனால், மத்திய மற்றும் மேல்தட்டு மக்களிடையே இந்த நம்பிக்கைகள் அதிகம் இருப்பதில்லை; அவர்கள் வசதிகள் படைத்தோர் மட்டுமல்ல - பெரும்பான்மையான பெண்கள் "நல்ல" வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர். "பாரதி" போன்றோர் (கணவாய்)வேண்டிட்ட பெண்-விடுதலை "நாட்டின்-சுதந்திரம்" போன்றே சரியாய் புரிந்து கொள்ளாது போனது "துரதிஷ்டமானது". சம்பாதிப்பதும், திருமணமான பின்னும் தந்தை வீட்டில் இருப்பதும்-தான் வாழ்க்கை என்று தவறுதலாய் புரிந்துகொண்டுள்ளனரோ என்ற பயம் வருகிறது. அதனால் தான், எதற்கெடுத்தாலும் "விவாகரத்து" என்கின்றனர்; ஆரம்பத்தில், கணவனை பயமுறுத்த/தன்வழிக்கு-கொண்டுவர "என்று" துவங்கினாலும் - பின் மனதளவில் பெரிய-ஆயுதம் போல் "மாயையாகி" நீதிமன்றம் வரை செல்வதை தான் மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரம் உணர்த்துகிறது. இந்த பெண்கள் அடிப்படையான ஒன்றை மறந்து விடுகின்றனர்; திருமணத்திற்கு (அல்லது பெரும்பாலும் வேலைக்கு செல்லும்) முன்னர் அவர்கள் "தந்தை" எனும் ஆணை சார்ந்திருந்ததை உணருவதே இல்லை. ஆனால், திருமணமான உடனேயே கணவன் தன்னை ஆட்படுத்த முயல்கிறான் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அதன் பின், எந்த பிரச்சனை ஆனாலும் - பெற்றோர் வீடு சேர்ந்து மீண்டும் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்க சித்தமாகின்றனர். அவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பாகவும், சந்தோசமாகவும் இருப்பர்; ஆனால், கணவனை விடுத்து அனுபவிக்கும் அந்த வாழ்க்கை எத்தனை நாட்கள் நீடிக்க முடியும்? அல்லது நீடிக்கவேண்டும்??

     ஒருவேளை, தன் தந்தையிடம் கிடைக்காத சுதந்திர-உணர்வை "கணவனிடம்" வெளிக்காட்ட நினைக்கின்றனரோ? சிறு விசயத்திற்கு கூட விட்டுக்கொடுக்காது; ஏன், தந்தையின் இல்லம் செல்லவேண்டும்?? நன்றாய் நினைவில் கொள்ளுங்கள்; கணவனை உதறிவிட்டு - தன்னிடம் மீண்டும் வரும் ஓர் பெண்ணின் தந்தையின் பொறுப்பு; பல மடங்குகள் அதிகமாகிறது (அந்த பெண்ணின் தாய்க்கும்; அவளின் மறு-தாய்க்கும் இடையேயும் இதுபோன்ற ஒப்பிடுதல் வேண்டும்!!!). தன் உயிர் என்பதால் "அந்த தந்தை" காண்பிக்காது மறைக்க எண்ணினாலும்; அவர்களின் கவலை "கட்டுப்பாடுகளாய்"தான் வெளிப்படும்! அதையும் அந்த பெண்கள் ஏற்கிறார்கள்! அதில், மிகக்குறைந்த விழுக்காட்டை தன் கணவனிடம் காட்டலாமே? இந்த மாதிரி ஓர் சூழ்நிலையை "திருமதி ஒரு வெகுமதி" திரைப்படத்தில் ஓர் அற்புதமான தந்தை அருமையாய் சமாளிப்பார். அந்த மாதிரி தான் "தந்தை" என்பவர் செயல்படவேண்டும்; அது பல விவாகரத்து வழக்குகளை அடியோடு அழித்துவிடும். திருமணமான பின், என் தமக்கை எப்போது வீட்டிற்கு வரினும் - எனக்கு அது பேரானந்தம்; எப்படியாயினும் விடுப்பில் வீடு சென்றுவிடுவேன். ஆனால், என் மறு-தமையன் கூறிய நேரத்திற்கு ஓர்-நாழிகை அதிகமாயினும் "எப்போது கிளம்புகிறாய்" என்று நான் கேட்கத்தவறியதே இல்லை! என் தமக்கையின் குடும்பம் தான் என் நினைவுக்கு வரும். ஆனால், இன்று வரை - எங்கள் உறவில் சிறு கீறல் கூட விழுந்ததில்லை. என் "மகளிடமும்" கண்டிப்பாய் அதுபோன்றே இருப்பேன்!!! 

        இப்போது பல மனைவிகள் - திருமணமான உடனே கணவன் என்பவன் தன் சொந்தம்; தன்னை தவிர அவன் குடும்ப உறுப்பினர்கள் எவரிடமும் உறவு கொள்ளக்கூடாது; அவர்களுக்கு பொருளுதவி ஏதும் செய்யக்கூடாது என்று விரும்புகின்றனர். "இது மாதிரி நினைக்கும் ஆண்களும் உண்டெனினும்", கண்டிப்பாய் அந்த மாதிரி நினைக்கும் பெண்கள் தான் அதிகம். இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை எனினும், பெரும்பான்மையான ஆண்கள் அதை செய்ய முயல்கின்றனர்; ஆனால், உடனடியாகவோ அல்லது முழுமையாகவோ செய்தல் எல்லோராலும் இயலாது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இதற்கிடையில், எதற்கெடுத்தாலும் - பெண்கள் மட்டும் அவர்களின் "தாய்-தந்தை" வீட்டிற்கு செல்வது எந்த விதத்தில் நியாயம்? அவர்களும் - "தான்-தன்" கணவனுக்கு மட்டும் தான்; என்று தானே இருக்கவேண்டும்?? பின் ஏன் புகுந்த வீடு செல்கின்றனர்? மாறாய், ஏதேனும் ஓர் விடுதியை சென்று சேரலாமே! ஆக, பெண்களுக்கு அவர்களின் பெற்றோரிடம் எப்போதும் நல்ல உறவு வேண்டும்; அவர்கள் எப்போது நினைத்தாலும் அவர்களிடம் தஞ்சம் புகலாம்; அவர்களின் பெற்றோரும் அவர்களை நல்வழிப்படுத்தி திருப்பி அனுப்புவதில்லை! அந்த கணவனின் நிலையை உணர்வோரும் எவருமில்லை! இங்கு ஏனோ எனக்கு, ஆண் தான் "மிகுந்த பொறுமைசாலி" மற்றும் "துரதிஷ்டவாதி" என்று பறைசாற்றிட தோன்றுகிறது; அவன் பெற்றோரிடமும் செல்வதில்லை; மனைவியும் உடனில்லை; அவனைப் பற்றி வருத்தப்பட அவனுடைய பெற்றோர் தவிர யாரும் இருப்பதில்லை.

          இப்படி பிரிந்து செல்லும் மனைவிக்கு ஓர் குழந்தை மட்டும் இருந்துவிட்டால், அந்த கணவனுக்கு வாழ்க்கை என்பது வெகுநிச்சயமாய் "நரகம்" - இறக்காமலே நரகத்தை காண்போர் அவர்! அந்த மனைவியும், பெற்றோர் வழிகாட்டுதல் இல்லாது தவறுமேல் தவறு செய்து கொண்டே செல்வாள். மிகச்சமீபத்தில் என் நண்பனின் வாழ்வில் நிகழ்ந்தது, கீழ்வருவது: அவனின் மகள் - ஓர் அற்புதம்! அவளை நான் கடைசியாய் சந்தித்தபோது அவளுக்கு 4 வயதிருந்திருக்கும்; அப்படி ஓர் அருமையான, மரியதையான பேச்சு; நடத்தை! உண்மையில், என் மகளை விட அந்தப்பெண்ணை உயர்த்தி சொல்ல நான் (எப்போதும்)தயங்கமாட்டேன்; அப்படி ஓர் அருமையான பெண்குழந்தை அவள். என்னுடைய, இன்னுமொரு நண்பன் ஓர்-நாள் அந்த குழந்தையை விட்டுவிட்டு அவனால் எப்படி விவாகரத்து செய்ய முடிந்தது? என்று வாதிட்டான்; அவனைப்போல் பல நண்பர்களும் வாதிட்டிருக்கக்கூடும். ஆனால், நான் நினைத்தது வேறு! என் மகளை விட, நானே அந்தக்குழந்தையை உயர்த்தி நினைக்கும்போது; அவளின் தந்தையாகிய என் நண்பன் எப்படியெல்லாம் எண்ணி இருப்பான்! அப்படிப்பட்டவனை - தன் தாயுடன் சேர்ந்துகொண்டு "விவாகரத்து" செய்யும் அளவுக்கும் ஓர் மனைவி செய்திருக்கிறாளே!! என்று தான் விக்கித்த்து போனேன்; 5 ஆண்டுகள் தன் மகளைப் பிரிந்து எத்தனை "வலிகளை" அவன் அனுபவித்து இருப்பான்? அதையெல்லாம் கடந்து - அவன் விவாகரத்து செய்திட "ஓர்முறை இறந்து - இன்னுமொரு முறை அவன் பிறந்து வந்திருப்பான்" என்று நான் உறுதியாய் நம்புகிறேன். 

      மனைவியர்களே! உங்கள் தந்தையிடம் காட்டும் அந்த உறவில் ஓர் பகுதியை உங்களின் கணவனிடம் காட்டுங்கள். இதை விளக்கிடுதல் கடினமாயினும், என்னால் இயன்ற வரை விளக்கி உள்ளேன்; இதை ஏற்றுக்கொள்ளுதல் மேலும் கடினம் எனினும் - கண்டிப்பாய் இது, "இயலாததல்ல"! முயற்சி செய்யுங்கள்; கண்டிப்பாய் "பிரசவ வேதனையை" விட கணவனின் எந்த செயலும் கொடிதாய் இருக்கமுடியாது; இது உங்கள் இருவர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல - உங்களின் "உயிரான மகள் மற்றும் மகன்" சம்பத்தப்பட்ட விசயம் மற்றும் வாழ்க்கை. 
     கனவன்களே! உங்களின் மனைவியின் எந்த செய்கையையும் மன்னிக்க தயாராகுங்கள்!! உங்கள் மகளிடம் காட்டும் உறவின் வலிமையில் ஓர் பகுதியை உங்கள் மனைவியிடன் காட்டுங்கள். இந்த பிரச்சனை காரணமாய் நீங்கள் உங்கள் மகள் (அல்லது மகனை) பிரிந்து அனுபவிக்கும் சங்கடங்கள் "பிரசவ வேதனைக்கு" சற்றும் குறைவில்லாதது என்பது புரிகிறது! ஒன்று "உடல்" சம்பந்தப்பட்டது; இன்னொன்று "மனம்"     சம்பந்தப்பட்டது - வித்தியாசம் அவ்வளவே!! வேதனை ஒன்றிற்கொன்று சற்றும் குறைந்தது அல்ல; எனினும் வாழ்க்கை தான் முக்கியம்!!! எனவே... 

உறவை நமக்குள்ளும் பகிர்ந்து, விவாகரத்துகளை குறைப்போம்!!!         

16 கருத்துகள்:

  1. அய்யா,
    தங்களின் தலையங்கம் அருமை. உங்களை போன்ற நல்ல சிந்தனை உள்ளவர்கள் எல்லா மருமகன்களுக்கும் வேண்டும். ஆனால் எனக்கு மிக மோசமான மாமனார், மாமியார் உள்ளனர். பெண்ணை கட்டிக்கொடுத்து விட்டு, வாழ விடாமல் மருமகனை துன்ப படுத்துவதை விட, படித்து விட்டு, வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதித்து, கணவனை விவாகரத்து செய்வது சிறந்தது.என் 8 வருட திருமண வாழ்கையில் 4 வருடங்கள் கூட சேர்ந்து வாழ வில்லை. என்னை பல விதங்களில் குறை கூறி என் பெற்றோரிடம் இருந்து பணம் பறித்தல்.வசிய மருந்து வைத்தல்.வசிய மருந்து பாதிப்பில் மனைவி வேண்டும் என்று பித்து பிடித்து மனைவியை தேடி சென்றால் தம்பியை வைத்து அடித்து ஆபரேஷன் செய்ய 45,000 செலவு வைத்தல், வருடகணக்கில் பிரிந்து இருந்து விட்டு விவாகரத்து கேட்டாலும்,தர மறுத்து பத்து லட்சம் கொடு,சொத்த கொடு என்று கேட்பது. இது மிக கொடுமை. என் மனைவி போன்ற பெண்களை ஒப்பிடும் போது கை நிறைய சம்பாதித்து, பிரச்னை வந்தால் கணவனை விவாகரத்து பண்ணுவது சிறந்தது.கணவனுக்கு அவமானமாக இருக்கும். ஆனால் என் போன்றவர்களின் நிலைமையை பார்க்கும் போது அந்த கணவன் நிலை எவ்வளவோ மேல்.
    நன்றி அய்யா.
    பதிலளிநீக்கு
  2. அய்யா இளங்கோவன் இளமுருகு அவர்களே ,
    சத்தியமாக சொல்கிறேன், உங்கள் கட்டுரை படித்துவிட்டு கணினி திரையை கை எடுத்து கும்பிட்டேன். உங்கள் வார்த்தைகளை திரையில் தொட்டு கும்பிட்டு,கும்பிட்டு கண்களில் ஒற்றிக்கொண்டேன். மிக அருமை,மிக அருமை. உங்களின் பாதங்களை நான் நன்றியால் கழுவுகின்றேன்.உண்மையில் உங்களை வணங்கவேண்டும் போல் உள்ளது.நன்றி அய்யா உங்களின் ஆழ்ந்த கருத்துக்கு.
    பதிலளிநீக்கு
  3. கனவன்களே! உங்களின் மனைவியின் எந்த செய்கையையும் மன்னிக்க தயாராகுங்கள்!! உங்கள் மகளிடம் காட்டும் உறவின் வலிமையில் ஓர் பகுதியை உங்கள் மனைவியிடன் காட்டுங்கள். இந்த பிரச்சனை காரணமாய் நீங்கள் உங்கள் மகள் (அல்லது மகனை) பிரிந்து அனுபவிக்கும் சங்கடங்கள் "பிரசவ வேதனைக்கு" சற்றும் குறைவில்லாதது என்பது புரிகிறது! ஒன்று "உடல்" சம்பந்தப்பட்டது; இன்னொன்று "மனம்" சம்பந்தப்பட்டது - வித்தியாசம் அவ்வளவே!! வேதனை ஒன்றிற்கொன்று சற்றும் குறைந்தது அல்ல; எனினும் வாழ்க்கை தான் முக்கியம்!!! எனவே...

    உறவை நமக்குள்ளும் பகிர்ந்து, விவாகரத்துகளை குறைப்போம்!!! உங்களின் கருத்து ஏற்று கொள்ள கூடியது.ஆனால்
    ஒரு கணவனாய் மனைவி எனக்கு தெரியாமல் வீட்டில் இருந்து பணத்தை எடுத்துகொண்டால் ஏன் எடுத்தாய், அந்த பணத்தை என்ன செய்தாய் என்று கேட்பதற்கு கணவனுக்கு உரிமை இல்லை.கேட்டால் கொடுமை செய்கிறான் என்று கூறுவது.
    பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வரும் மருமகனை அவமானபடுத்துவது, மருமகனின் நண்பர்கள் மனைவியை பிரிந்து உன் கணவர் ஒழுங்காக சாபிடுவது இல்லை.ஆள் ரொம்ப கவலையில் செத்து போய்டுவான், வந்து வாழ் என்ரால் நீங்கள் யார், அவனுக்கு நண்பர் என்று யாருமே இருக்க முடியாது,ஒங்களுக்கு என்ன தெரியும், அடிக்கிறான்,பணம் கொடுப்பது இல்லை, நான் மாதம் ரூபாய் 2500 குடும்பம் நடத்த தருகிறேன், எதற்கு என் பெண் அங்கே இருக்க வேண்டும். அவனை ஒழுங்கா நடந்து கொள்ள சொல்லுங்கள் என்று பொய் கூறுவது. உண்மையில் கடந்த 8 வருடங்களில் ஒருமுறை 1000 அவர் பெண்ணிடம் தந்தார்.இப்படி கூறுபவரிகளிடம் எந்த முறையில் உறவை வளர்ப்பது. எனக்கு சிகரெட்,தண்ணி பழக்கம் இல்லை. அந்த பழக்கம் உள்ள அவர்கள் என்னை பையித்தியம் என்று கூறி என் பெற்றோர்களை அவனுக்கு சிகிட்சை கொடுங்கள் என்று சொல்லி மன நல மையம் சென்று கவுன்செல்லிங் கொடுத்து சேர்ந்து வாழவேண்டும் என்று என் மனைவிக்கும்,அவளது தந்தைக்கும் அறிவுரை கூறிய பின்னும் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று வாழ மறுபவர்களிடையே எப்படி உறவை ஏற்படுத்துவது. எனக்கு பெண்டாட்டி,பிள்ளைகள் இல்லாமல் இருக்க முடியாது நீ என்னை விட்டு போக கூடாது,மீறி போனால் விவாகரத்து செய்து விட்டு சென்று விடு என்று கேட்டேன்.சரி ஏற்பாடு செய் என்று சொல்லி ஒரு பேப்பரில் மணமுறிவு ஒப்பந்தம் எழுதி கையெழுத்து,ரேகை வைத்து விட்டு சென்று விட்டாள். போய் அழைத்தாலும் நான் தான் எழுதிகொடுதுவிட்டேன் வரமுடியாது என்று சொல்லுதல்.வசிய மருந்து வைத்து புருசனை இம்சை செய்தல்.சொல்லாமல் பணத்தை எடுத்துக்கொள்ளுதல், வாழ அழைத்தாலும் வர மறுத்து பொய் பேசுதல், சட்டப்படி சேர்ந்து வாழும் உரிமைப்படி சேர்ந்து வாழ இலவச சட்ட உதவி மையத்தில் அழைத்தாள் என் மனைவி வராமல் மாமனார் வந்து இவன் பைத்தியம்,கொடுமை படுத்துவான்,அடிப்பான்,எவ்வாறு என் பெண் வாழும் என்று என்னை உண்மைக்கு மாறாக திட்டுவது, தனி குடித்தனம் செல்ல வற்புறுத்துவது, தனி குடித்தனம் இருந்தால் அப்பா வீட்டிலேயே இருந்து கொண்டு என்னை தனியாக சமைத்து சாப்பிட விடுதல்,கூப்பிட்டால் அதிகாரம் செய்கிறான் என்று குறை கூறுவது, அக்கா புருஷன் வீட்டில் இருந்து கொண்டு என்னை அவமானபடுத்துவது என்று இருபவர்களிடம் எவ்வாறு உறவை மேம்படுத்துவது.
    பதிலளிநீக்கு
  4. ஆனந்த்!

    முதலில் என்னுடைய நன்றிகளை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்! வலைப்பதிவை நீங்கள் ஆழ்ந்து படித்திருப்பது (தொடர்ந்து படித்து வருவது) புரிகிறது; குறிப்பாய் இந்த தலையங்கம் உங்களை கவர்ந்திருப்பதை அறிந்தேன். உங்களின் வேதனை தெரிந்தது; உங்களின் மனச்சுமை குறைந்து, மனமகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுகிறேன்.

    உறவை மேம்படுத்த வேண்டும், உறவு வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உறுதியாயிருப்பின் - எல்லா நிகழ்வுகளையும் கடந்து வரலாம் என்பது என் நம்பிக்கை; இது கண்டிப்பாய் கடினமானது எண்பது எனக்கு தெரியும்; ஆயினும், இது சாத்தியமே! வாய்ப்பும், விருப்பும் இருப்பின் "மரணத்திற்கு பிறகு என்ன?" என்ற என்னுடைய தலையங்கத்தை படித்து பார்க்கவும்.
    பதிலளி
  5. இளங்கோவன் இளமுருகு அவர்களே,
    நீங்கள் அறிந்து கொண்டது சரியே.எனக்கு தற்போது இந்த தலையங்கம் ஆழ்ந்த புரிதலை,அமைதியை தந்தது.ஒவ்வொருவரும் அவர் அவர் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப படிப்பதும், படம் பார்ப்பதும் பிடிக்கும். சமீபத்தில்என் நண்பன் ஸ்டாலினிடம் இருந்து dvd வாங்கி வத்திக்குச்சி திரைப்படம் பார்த்தேன்.பார்த்து விட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னேன்.நன்றாக இருக்கிறதா? சரியான அறுவை என்று சொன்னார்கள் என்று சொன்னான்.அப்படி அல்ல ஒரு சாதாரண சமத்துவ புறத்தில் வாழும் ஒருவன் அநீதியை எதிர்த்து ஜெயிப்பது எனக்கு தற்போதைய சூழலில் மிக நன்றாக இருந்தது என்று சொன்னேன்.அதுவரை அந்த படத்தை பார்க்காமல் இருந்தவன் உடன் பார்க்க ஆரம்பித்து விட்டான்.இந்த நண்பன் தான் TET EXAM எழுத என் மனைவியின் ஊருக்கு சென்று இருந்த பொழுது என் மனைவியிடமும், மச்சினனிடமும்,மனையிவின் பெரியப்பா பையன் வேலுமணி,என் மாமியார்,மாமனாரிடமும் நான் மனைவியை பிரிந்து மிகவும் துயரமாக இருபதாகவும் அதனால் ஒழுங்காக சாப்பிடுவது இல்லை.இப்படியே இருந்தால் செத்து விடுவான்.மிக துன்ப படுகிறான்.ஆகையால் அவனுடன் சேர்ந்து வாழ்க்கையை நன்றாக ஆக்கு என்றும். நான் அவனிடம் உன் மாமனார்,மாமியார் காலில் விழுந்து உன் மனைவியை அனுப்பும் படி கேட்டு கண்டிப்பாக அழைத்து வருவேன் என்று உறுதி கூறியுள்ளேன் என்று கூறி அழைத்த போது தான் நான் மன நிலை சரி இல்லாதவன்,அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பு இல்லை.நீங்கள் என்ன உண்மையான நண்பரா என்றும், என் மனைவி என்னுடன் வாழ்வதற்க்கு என் மாமனார் மாதா மாதம் ரூ.2500 தருவதாகவும். ஆனால் நான் என் மனைவியை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி வாசலில் வைத்தே பேசி குடிக்க தண்ணி கூட கொடுக்காமல் அனுப்பி விட்டதாக கூறினான்.நான் என் மனைவியிடம் ஏன் அவ்வாறு செய்தாய் என்று கேட்டேன். எதற்காக அந்த ஆளை அனுப்பி வைத்தாய். என்றாள்.நான் வற்புறுத்த வில்லை.அவன் தான் இப்படி ஏங்குவதை விட காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு மனைவியை அழைத்து வா என்று சொன்னான்.நான் பல முறை என் மனைவியை அழைத்து விட்டேன் வரவில்லை என்று சொன்னேன்.அவன் என்னை குறைவாக மதிப்பிட்டு அவன் எப்படியும் அழைத்து வந்து விடுவதாக கூறி வந்துள்ளான் என்று கூறினேன்.யார் வந்து அழைத்தாலும் வர மாட்டேன் என்று சொன்னாள்.உன் அப்பா பொய் சொல்லி உள்ளாரே என்றேன்.அப்படி தான் பேசுவோம் என்று சொன்னாள்.
    உறவை மேம்படுத்துவது என்பது இருவரிடமும் உள்ளது.உறவு வேண்டும் என்பதும் இருவரிடமும் உள்ளது.கணவன் மட்டும் உறவு வேண்டும்,உறவை மேம்படுத்த வேண்டும் என்று பல முறை முயற்சி செய்து மீண்டும் தோல்வி அடைவது என்பது மிக கடினமானது. உறவு வேண்டாம் என்று பிரிந்து,பிரித்து வைக்க பட்டுள்ள மனைவியை என் நண்பன்,என் பெற்றோர்,என் சகோதரன்,சகோதரனின் மனைவி,என் மனைவியின் உறவினர்கள்,என் தாய் மாமா மற்றும் பலர் கடந்த 8 வருடங்களில் பல முறை வற்புறுத்தி சேர்த்து வைத்து உள்ளனர்.
    பதிலளிநீக்கு
  6. (தொடர்சி...) என் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று நான் என் பெற்றோரை மிகவும் வற்புறுத்துவேன்.நான் நேரில் சென்று அழைத்தும் வர மறுக்கிறாள்.அவளின் பெற்றோர் அனுப்ப மறுகின்றனர்.ஆகையால் சேர்த்து வையுங்கள் என்று பல முறை சண்டை இட்டுள்ளேன்.எனக்கு வசிய மருந்து வைத்து விட்டு என்னிடம் எதாவது குறை சொல்லி விட்டு என் மனைவி சென்று விடுவாள். மற்றொரு உறவுக்கார நண்பர் தொட்டியம் சென்று என் மனைவியை உன் கணவன் என்னிடம் வம்புக்கு வருகிறான்.எப்படி எனக்கு தெரியாமல் என் மனைவியை எல்லா சாமான்களையும் எடுத்துகொண்டு அனுப்பி விட்டாய் என்று.ஆகையால் தயவு செய்து வந்து வாழவும் என்று கேட்டதற்கு சொத்தை பிரித்துக்கொண்டு தனியே வர சொல்லுங்கள் நான் வருகிறேன் என்று கூறியுள்ளாள். அவரும் என் அம்மாவிடம் சொத்தை பிரித்து கொடுத்து விட வேண்டியது தானே என்று கேட்டுள்ளார்.என் அப்பாவோ எதற்கு சொத்தை பிரிக்க சொல்லவேண்டும் என்று சொல்லிவிட்டார். நானும் அது அவசியம் சேர்ந்து வாழ தேவை அற்றது.வேண்டுமானால் என் மனைவி அவள் சொத்தை பிரித்து எடுத்துக்கொண்டு வந்து விட்டு பின் என்னை பிரிக்க சொல்லவும் என்று சொல்லிவிட்டேன்.
    முதல் முறை வசிய மருந்து வைத்து என்னை பித்து பிடிக்க வைத்த போது யாரிடம் சென்று வாங்கி வந்தாள் என்பது தெரியாது. ஆனால் தற்போது எங்களுக்கு தெரிந்தவர்கள்(கல்யாணி,அவர் பையன் சதீஷ்) என் மனைவியை வசிய மருந்து செய்பவன் வீட்டில் கொண்டு விட்டு இருக்கிறார்கள். வசிய மருந்து செய்பவர் ஜோதிட நிலையம் என்று பெயர் பலகை வைத்துள்ளார்.என் மனைவியை அவர்கள் அந்த ஊரில் உள்ள குல தெய்வத்திற்கு விளக்கு ஏற்ற சென்று விட்டு திரும்பும் பொழுது பார்க்கவும் எங்கே இங்கே வந்தாய் என்று கேட்டுள்ளனர்.எங்களுக்கு தெரியாமல் என் அம்மாவிடம் திருச்சிக்கு அழகு நிலையத்திற்கு தேவையான பொருள் வாங்கி வருகிறேன் என்று சொல்லி இங்கு ஜோதிடம் பார்க்க வந்ததாக என் மனைவி சொல்லவும் அங்கு பைக்கில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.தற்போது நான் என் பெற்றோருடன் சண்டை இட்டு கொண்டுள்ளதை அறிந்து அவர்கள் என் அப்பாவை அந்த ஜோதிடரிடம் அழைத்து சென்று வசிய மருந்து பற்றி பொதுவாக கேட்டு விட்டு,நாங்கள் அழைத்து வந்த பெண்(ரேணுகா) பற்றி கேட்டுள்ளனர்.அந்த ஜோதிடரும் வந்துள்ளவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் என்றும்,என் அப்பா அதில் ஒருவர் என்றும் அறியாமல் ஆமாம் நீங்கள் அழைத்து வந்த ரேணுகா ஆனந்த் வந்தார்கள்.ஆனந்த் மனைவியிடம் பாசமாக இருப்பதற்கு வசிய மருந்து செய்து கொடுத்து அவர்கள் தற்போது நன்றாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.என் அப்பா வாயை வைத்துகொண்டு சும்மா இல்லாமல் நான் தான் ஆனந்தின் அப்பா என்று சொல்லியுள்ளார்.உடன் அந்த ஜோதிடர் அழைத்துக்கொண்டு சென்றவர்களை ஏன் இவரை இங்கு அழைத்து கொண்டு வந்தாய் என்று கேட்டு அனுப்பிவிட்டார்.நல்லதுக்கு தான் வசிய மருந்து செய்து கொடுத்ததாக கூறியுள்ளார்.ஆனால் நான் அதனால் பல தொல்லைகளுக்கு உள்ளானேன்.இதனால் நான் இறந்து இருந்தால் உறவு மேம்பட்டு இருக்கும்.
    உறவை இப்படி மேம்படுத்த முடியுமா?
    பதிலளிநீக்கு
  7. ஒரு ஆண் தனக்கு நேரும் சங்கடங்களை, உடல், மன ரீதியான பாதிப்புகளை தயக்கத்தின் காரணமாக வெளியில் சொல்வதில்லை. அப்படி வெளியில் சொல்லும் ஆண்களை சில பெண்கள் பொட்டை தனமா நடந்துக்கிறான் என்று அவமான படுத்துவதால் சரியான சூழல் அமைவது இல்லை.
    பதிலளிநீக்கு
  8. எனது கருத்துரையை வாசிக்கும் நண்பர்களுக்கு,
    மிக அதிக மன அழுத்தம் காரணமாக தெளிவான உரைநடையில் என்னால் எழுத முடியாமல் போனதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். வார்த்தைகளுக்கு இடையில் கமா(,)வைக்காமல்,வாக்கியங்களை பிரித்து தெளிவாக எழுதாமல்,எனது உணர்வுகளை எழுதியுள்ளேன்.படிக்க மிக சிரமமாக இருக்கும்.பொருத்துக்கொண்டு மன்னித்தருளுங்கள்.
    பதிலளிநீக்கு
  9. என் தாயும் சிறந்த ஆசிரியை(ஒய்வு).என் தாயின் தயவால் தான் உங்களின் இந்த தலையங்கத்தை வாசிக்கும் கருணையை இறைவன் எனக்கு ஏற்படுத்தி இருக்கிறான் என்றே நினைக்கிறேன்.நன்றி இளமுருகு அவர்களே. உங்கள் தந்தை உங்களுக்கு அருமையாக தமிழ் எழுத,உணர்வுகளை உணர்ந்து எழுத ஆசிர்வதித்து உள்ளார்.உங்கள் தந்தைக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.நன்றி.
    பதிலளிநீக்கு
  10. குடும்ப வன்முறைச் சட்டத்தினால், 2003 முதல் 2006 வரை ஒன்றரை லட்சம் ஆண்கள், நாடு முழுவதும் தற்கொலை செய்துள்ளனர்.
    ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, சென்னையில் உள்ள, “ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின்’ மாநிலத் தலைவர் அருள் துமிலன் கூறியதாவது: பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் சமூக பாதுகாப்பிற்காக, இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் அடிமைத்தனம், பெண்களின் முன்னேற்றம் என்று, பெண்களுக்கே சமூகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது; ஆண்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படுகின்றனர். சமூகத்தில் ஆண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை அவர்கள் வெளிப்படையாக சொல்வது கிடையாது. சில ஆண்கள் முன்வந்து கூறினாலும், அவர்களுக்கு உரிய நிவாரணம், சட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு என்று எதுவும் கிடைப்பது இல்லை. எனவே, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு, இச்சங்கத்தின் மூலம், பாதுகாப்பும், சட்ட உதவியும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த அமைப்பின் நோக்கம்.தற்போது குடும்ப வன்முறைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் ஆண்களுக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளன. இந்த சட்டங்களை, பெண்கள், ஆண்களைத் தாக்கும் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இதனால், பராம்பரியமான குடும்ப அமைப்புகள் சீர்குலைந்து விடுகின்றன. குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.இவ்வாறு அருள் துமிலன் கூறினார்.
    பதிலளிநீக்கு
  11. சந்திரா (டெல்லி ஹவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியை) : “ மனித இனங்கள் முன்பு வாழ்ந்த காலத்திலிருந்து இன்றைய காலக்கட்டம் வரை சூழ்நிலைகள் எப்படி மாறி வருகிறது என பார்த்தீர்களா? பெண்களுக்கு சுதந்திரம், பெண்களுக்கு உரிமை என்று ஒலித்த குரல்கள் அடங்கி, ஆண்களுக்கு உரிமை, பாதுகாப்பு என்று கேட்;கின்ற சூழ்நிலை இன்று உருவாகி விட்டது. ஆண்களின் அதிகாரம் நிறைந்த இன்றைய அனைத்து துறைகளிலும் பெண்கள் நுழையும் பொழுது ஆண்களுக்கு பயம் வருகிறது. இப்பொழுது ஒலித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விடுதலை என்ற கோ~ம் மறைந்து, ஆண்களுக்கு விடுதலை வேண்டும் என்று போராட வேண்டிய நிலை வந்து விடுமோ என்ற பயத்தின் வெளிப்பாடாக இந்த ஆண்கள் உரிமை பாதுகாப்பு சங்கத்தை சொல்லலாம். ஆண்களுக்கு ஒரு சங்கம் என்ற வகையில் இந்த சங்கம் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது என்பது எனது அடிப்படை கருத்து. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் ஒன்று சேர்ந்து, ஒரு சமூக அமைப்பை வழி நடத்த ஆரம்பித்தால் அதில் வெற்றி அடைவர். இது ஆண்களுக்கு பொருந்தாது. அவர்கள் ஒரு சுயநலவாதிகள். சுய வாழ்வுக்கு, சுகத்திற்கு எது தேவையோ அதில் மட்டுமே திறமையாக பணிபுரியக் கூடியவர்கள். விதி விலக்காக சிலர் இருக்கலாம். ஒரு தீ பொறி போல் ஆரம்பித்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள், இன்று மிகப் பெரிய அளவிலான நெட்வொர்க்காக, ஓட்டு வங்கியாக மாறி இருக்கிறது. இதனை ஏன் ஆண்கள் செய்யவில்லை. எத்தனை ஆண்கள் சுய உதவிக் குழுக்கள் இன்று இந்தியாவில் இருக்கிறது? ஆண், பெண் இருவாரில் யார் சிறந்தவர்கள்? கண்டிப்பாக பெண்கள் தான். எந்தப் பெண்களும் புகை பிடித்து விட்டோ, பீர் அருந்தி விட்டோ அல்லது மது அருந்தி விட்டோ கல்லூரிக்குள் வருவதில்லை. கேளிக்கைகள், ஆடம்பரங்கள் ஆண், பெண்ணிடம் இருந்தாலும் அடிப்படைக் கொள்கையில் அதாவது வாழ்வியல் ஆதாரத்தை உறுதியாக நிலைநிறுத்துவதில் பெண்கள் தான் சிறந்தவர்கள். ராகுல் சாங்கிருத்தியாயன் எழுதிய "வால்கா முதல் கங்கை வரை" என்ற வரலாற்று நூலை படித்தால் ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்படி, எதனால், ஏன் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், ஆதிக்க உணர்வுகள் வந்தது, வருகிறது என்பதை நாம் தீர்மானிக்கலாம். பெண் கொலை செய்கிறாள், கொள்ளை அடிக்கிறாள். ஆட்சியையே பிடிக்கிறாள் என்றால் அது என்ன புதிதாக நடைபெறுகிற அதிசய சம்பவங்களா? அது ஆண்கள் காட்டிய வழி. அதனை சில பெண்கள் கடைபிடித்திருக்கிறார்கள். அவ்வளவு தான், அது எப்படி பெண்களுக்கான வழிகாட்டியாக மாற முடியும்? ஒரு பெண், காவல் நிலையத்தில் கணவனுக்கு எதிராக புகார் செய்யும் பொழுது அங்கு அவளுக்கு முழுமையான நியாயம் கிடைத்து விட வாய்ப்பு கிடையாது. புகார் கொடுக்கச் செல்லும் பெண்ணை காவல் துறையினர் பார்க்கின்ற பார்வை அவ்வளவு அருவருப்பானவை. காவல் துறை ஆண்களின் அதிகாரம் நிறைந்த ஒரு கோட்டை. அந்தக் கோட்டைக்குள் பெண்கள் நுழைந்த உடன் தான் பெண்களுக்கு நேர்மையான நீதிகள் கிடைக்கிறது. மகளிர் காவல் நிலையங்கள் இன்று இல்லாமல் இருந்திருந்தால் ஆண்களின் கோட்டையால் பெரும்பாலான ஆண்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். “
    இளங்கோவன் இளமுருகு அவர்களே,
    "ஆண்களுக்கு ஒரு சங்கம் என்ற வகையில் இந்த சங்கம் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது என்பது எனது அடிப்படை கருத்து. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் ஒன்று சேர்ந்து, ஒரு சமூக அமைப்பை வழி நடத்த ஆரம்பித்தால் அதில் வெற்றி அடைவர். இது ஆண்களுக்கு பொருந்தாது. அவர்கள் ஒரு சுயநலவாதிகள். சுய வாழ்வுக்கு, சுகத்திற்கு எது தேவையோ அதில் மட்டுமே திறமையாக பணிபுரியக் கூடியவர்கள். விதி விலக்காக சிலர் இருக்கலாம்."

    இது பற்றி நீங்கள் விரிவாக உங்கள் கருத்தை சொன்னால் நன்றாக இருக்கும்.
    பதிலளிநீக்கு
  12. அப்பா புறகணிக்கப்பட்டு உள்ள வீடுகளில் குழந்தைகள் நிலை என்ன?
    தந்தை புறக்கணிக்கப்பட்ட வீடுகளில் வளரும் குழந்தைகள்:

    தற்கொலைக்கு 5 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

    தாயை விட்டு ஓட 32 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

    நடத்தை கோளாறுகள் ஏற்பட 20 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

    கற்பழிப்பு செய்ய, செய்யப்பட 14 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

    உயர்நிலை பள்ளி கைவிட 9 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

    இரசாயன பொருட்கள் துஷ்பிரயோகம் 10 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

    ஒரு அரசு சார்ந்த சிறார் சிறை கல்வியில் முடிவடையும் வாய்ப்பு 9 மடங்கு அதிகமாக உள்ளது.

    சிறையில் முடிவடையும் வாய்ப்பு 20 மடங்கு அதிகமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
    பதிலளி
  14. ஆண்கள் செய்யும் மிக பெரிய தவறு ஒன்று அவர்களது வழக்கறிஞர் நிகழ்வுகளை நடத்த அனுமதிப்பது.. வழக்கறிஞர்கள் பணம் ஈட்ட வணிகத்தில் உள்ளனர் , நீங்கள் ஒரு நியாயமான தீர்வை அடைய அல்லது உங்கள் குழந்தைகள் உங்கள் காவலில் இருக்க உதவ முடியாது.
    குடும்ப நல, விவாகரத்து வழக்கறிஞர்கள் ஆண்டு ஒன்றுக்கு 100 வழக்குகள் கையாளுகின்றனர் . அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உங்களை பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு நீங்கள் வெற்றி அல்லது தோல்வி பெறுவது பற்றி கவலையில்லை ஏனென்றால் அவர்கள் பணம் பெற காரணமாக உங்கள் வழக்கு உள்ளது..
    பில்லியன் டாலர் விவாகரத்து துறையில், நீங்கள் அவர்களின் போக்கர் மேஜையில் உள்ள இன்னொரு clueless rookie ... நாம் அனைவரும் அறிவோம் clueless rookies என்ன நடக்கும் என்று.
    பல வழக்கறிஞர்கள் கூடி கலந்து பேசுவது, நீதிமன்ற தீர்வு ஆகியவற்றை புறக்கணிக்க விரும்புகின்றனர். காரணம் . பிரச்சனையை அவர்கள் நிரந்தரமாக இழுக்க விரும்புகின்றார்.
    குடும்ப நல,விவாகரத்து வக்கீல்கள் உங்கள் பணத்தை உங்களிடம் இருந்து பிரிப்பதில் நிபுணர்கள்.
    நினைவில் இருக்கட்டும்: அனைத்து வழக்கறிஞர் நகைச்சுவைகளிலும் நல்ல உண்மை காரணம் உள்ளன.
    பதிலளிநீக்கு
  15. தற்போது குழந்தைகளை கணவனின் சம்மதம் இல்லாமல், அவனுக்கு தெரியாமல் தூக்கி கொண்டு யாருடனாவது ஓடி விட்டு, பின்னர் கணவன் கொடுமை படுத்தி, அடித்து விரட்டி விட்டான் , நானும், என் குழந்தைகளும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இன்றி தவிக்கிறோம் எங்களுக்கு ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலம் கருதி ரூபாய் 10,00,00(குறைந்த பட்சம்) வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்து கணவனின் வீட்டில் பணம் பெற்று வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சுகமாக பெண்கள் வாழ்கின்றனர். கட்டிய கணவன் தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றனர். இது வருடம் தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
    குழந்தை சட்டப்படி, இயற்கைப்படி ஆணுக்கு தான் சொந்தம். அவனுடைய குழந்தையை திருடி எடுத்து சென்று விட்டு வழக்கிட்டு பணம் பெறுவது இயற்கையை அழிக்கும் செயல் ஆகும்.

    குழந்தை யாருக்கு சொந்தம்... இது பற்றி யோக குரு சுவாமி சிவானந்த பரமஹம்ஷர் கூறியுள்ள கருத்து.
    (குரு சிஷ்யன் உரையாடல்:)
    சி: உலகத்தில் பெண்களுக்கு கர்ப்பம் உண்டாகவும் அவர்கள் பிரசவிக்கவும் செய்கிறார்கள்.அவர்களை நாம் தாய் என்று சொல்லுகிறோம்.
    கு: யார் பிரசவிக்கிறார்கள்?
    சி: பெண்கள்.
    கு: பெண்கள் பிரசவிப்பதன் காரணம் என்ன:?
    சி:கர்ப்பம் உண்டாயிருந்ததால்.
    கு: கர்ப்பம் எப்படி உண்டாகின்றது?
    சி: சம்யோகத்தினால்.
    கு: சம்யோகம் இல்லையென்றால் கர்ப்பம் உண்டாகுமோ?
    சி:உண்டாகாது.
    கு: சம்யோகம் செய்தால் கர்ப்பம் உண்டாக காரணம் என்ன?
    சி: சுக்கிலம் அதாவது விந்து சென்று விழுவதனால் ஆகும்.
    கு; சுக்கிலம் இல்லை என்றால் கர்ப்பம் உண்டாகுமோ?
    சி: உண்டாகாது.
    கு:அப்பொழுது கர்ப்பம் உண்டாவதற்கு சுக்கிலம் என்னவாகிறது?
    சி: வித்து அதாவது விதை.
    கு: உங்கள் கைவசம் கொஞ்சம் நெல் விதை இருக்கின்றதாக வைத்துக்கொள்வோம்.அதை எவ்விதம் பயிர் செய்வது?
    சி: வயலின் ஒரு பாகத்தை உழுது சேறாக்கி சமப்படுத்தி அதில் விதைக்கிறோம்.
    கு: அந்த விதையை விதைக்கவேண்டிய இடத்தில் அல்லாமல் வேறு இடத்தில் விதைத்தால் அது முளைக்குமா?
    சி: முளைக்கும்.
    கு: ஒருக்காலமும் முளைக்காது.விதைக்க வேண்டிய இடத்தில் அல்லாமல் வேறு இடத்தில் விதைத்தால் முளைப்பதில்லை.நீங்கள் அவ்விதையை பத்திரப்படுத்தியிருந்த களஞ்சியதிளிருந்தோ, அறையில் இருந்தோ முளைக்குமா?
    சி:முளைக்காது.
    கு:காரணமென்ன?
    சி:வித்து விதைப்பதர்காகத் தயார் செய்த இடத்தில் அல்லாததால்.
    கு: அப்பொழுது வித்து விதைக்க ஏற்படுத்திய இடத்தில் அல்லாமல் விதைத்தால் முளைபதில்லை.அந்த வித்து விதைப்பதற்காக தயார் செய்த இடத்தில் விதைத்தால், அது முளைத்து வளர்ந்து,முதிர்ந்து,கதிர் உண்டாகிறது. எனில் அந்த கதிரை நீர் நெற் கதிரேன்றோ, வயலின் கதிரேன்றோ சொல்லுவீர்?
    சி: நெற்கதிர் என்றே சொல்லுவேன்.
    கு: அந்த கதிர் வயலில் அல்லவா உண்டாயிற்று? எதைக்கொண்டாகும் நெற்கதிர் என்று சொல்லுவது?
    சி:அந்த வயலில் நெல்விதையை விதைக்கவில்லை என்றால் அந்த நெற்கதிர் உண்டாவதில்லை.அப்பொழுது அந்த நெல் விதையில் இருந்து தான் அந்தக் கதிர் உண்டாயிற்று. அதனால் தான் நெற்கதிர் என்று சொல்லக்காரணம்.
    கு: அந்த வயலைக்கொண்டுள்ள தேவை என்னவாயிருந்தது?
    சி: விதை விதைத்து பயிர் செய்ய வேண்டிய தேவைக்காகும்.
    கு: அந்த விதையை வயலில் பயிர் செய்து கதிர் உண்டானபோது வயலில் இருந்து உண்டானது என்று சொல்லக்கூடுமோ?
    சி: கூடாது.
    கு: அப்படியானால் அந்த நெற்கதிர் எதிலிருந்து உண்டானது என்று சொல்லவேண்டும்.
    சி:விதையிலிருந்து.
    கு: அப்பொழுது அந்தக் கதிரைப் பிரசவித்தது யாராகும்? வயலோ? வித்தோ?
    சி: வித்தாகும் பிரசவித்தது.
    (தொடரும்...)
    பதிலளிநீக்கு
  16. (தொடர்ச்சி...)
    கு: சுக்கிலமாகிய விதையைப் போட வேண்டிய இடமாகிய வயலைத் தளர்த்தி செய்கின்றதுதான் புணர்ச்சி. அந்த சம்யோகம் அதாவது புணர்ச்சியினால் அந்த இடம் தளர்சியாகிறது.அப்பொழுது முட்டை வடிவாகி சுக்கிலம் சென்று விழுகிறதும் அந்தத் தளற்சியாயிருக்கின்ற இடம் அதற்க்கு சேர்க்கையா நின்று முட்டை வடிவாகிய வித்து முளைத்து வருவதற்காக தளர்சியாவதும் அது பருத்து மூப்படைந்தபோது, உடைந்து வெளியில் வருவதுமாகும்.அதுவாகும் குழைந்தை. அப்பொழுது அந்த பெண் பிரசவித்தால் என்று சொல்லுவதர்க்கிடமுண்டோ:/
    சி: இல்லை.
    கு: என்ன காரணம்.
    சி: அது சுக்கிலத்தில் இருந்து உண்டானது. சுக்கிலம் இல்லை என்றால் பிரசவிப்பது இல்லை.
    கு: அப்படி என்றால் புருஷன் சுக்கிலத்தை தரிகின்றது அதாவது நிலை நிறுத்துவது தான் கர்ப்பம். அதெப்படிஎன்றால் ஜடமாகிய புரத்தில் சுக்கிலத்தை கர்பிக்கிறது. அதாவது வெளியில் விடாமல் பத்திரம் செய்து விருதியாக்குகின்றது. அப்போழுதாகும் கர்ப்பம் தரித்தது. அப்படி செய்யாவிட்டால் சுக்கிலமுண்டாகி சந்தானமுண்டாவதற்கு முடியுமா?
    சி: முடியாது.
    கு: அப்பொழுது யாராகும் கர்ப்பம் தரித்திருந்தது?
    சி: புருஷன்.
    கு: அப்படியானால் பிரசவிக்கின்றது யார்?
    சி: புருஷன்.
    கு: இவ்விதம் சொல்லப்படும் புருஷன் தரிக்கின்ற கர்ப்பத்தை ஸ்திரீகள் என்று சொல்லப்பட்டவர்களுடைய புணர்சியிடமாகிய, வித்தை விதைக்க வேண்டிய இடத்தில் புணர்ச்சி செய்து, தளர்ச்சியாக்கி, அந்த தளர்ச்சியில் வித்தாகின்ற சுக்கிலத்தை புருஷன் பிரசவிக்கின்றான்
    பதிலளிநீக்கு

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

அமிர்தபொடி பயன்கள்.

 என் அம்மா என் மனைவி தரும் சோதனைகளால் மிகுந்த உளைச்சலில் மன வேதனையில்,முதுகுவலியில் தவித்து,அழுது,வேலை செய்ய முடியவில்லை,நிற்க முடியவில்லை என்று வருந்தியபோது வீட்டிற்க்கு வந்த சித்த மருத்துவம் கற்றிருந்த காயத்ரி அமிர்த பொடி பயன்படுத்த அறிவுறித்தினர், அந்த ஆலோசனைகள் :

  அமிர்தபொடி பயன்கள்.
1) எல்லா வகையான வலிகளையும் குணமாக்கும் சிறந்த வலி நிவாரணி.
2) மூட்டு வலி,மூட்டு தேய்மானம், குதி கால் எரிச்சல் ஆகியவற்றிற்கு ஆயில் உடன் சேர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன்.
3) தீராத ஒற்றை தலைவலியால் ஏற்படும் பின் மண்டை குத்துதல் பிரச்னைக்கு (நீலகிரி தைலம் போன்ற) தைலம் உடன் சேர்ந்து பயன் படுத்தினால் உடன் தீர்வு.
4) கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல், தலையில் நீர் கோர்த்தல் போன்றவற்றிற்கு தைலம்  உடன் பயன்படுத்தினால் நல்ல தீர்வு.
5) மூல நோய்க்கு நல்ல தீர்வு.மூல நோயால் ஏற்படும் வெடிப்பு, மலசிக்கல், எரிச்சல் ஆகியவற்றை குணமாக்க தண்ணீர் உடன் பயன்படுத்தினால் நல்ல தீர்வு.
6)மார்பக வலி, எரிச்சல், குத்துதல் போன்றவற்றிற்கு நல்ல தீர்வு.
7`tigerஆயில் உடன் கலந்து வைக்கலாம்.

சொத்தை பல் கல் மருத்துவம்.

எனது இடது மேல்வரிசை கடவாய் கடைசி பல் சொத்தை ஆனது.injection பல் பொடி உபயோகம்,புழுவை வெளியே எடுத்தல் முறை, அமிர்த பொடியில் வைத்த கல் சிகிச்சை,ஆயில் புல்லிங்,mindcare cap போன்றவற்றால் சுமார் 18
மாதங்கள் பல்லை பிடுங்காமல் உள்ளேன்.இதை முறையாக தொடர்ந்து உபயோகிப்பது இல்லை.பல் வலி வரும் போது இவைகளை கடைபிடிக்கிறேன்.அதில் அமிர்த பொடி கலந்த கல் சிகிச்சை பற்றிய விவரம் இங்கே.
சொத்தை பல் கல் மருந்தின்  பயன்கள்.
1)  சொத்தை பல் குணமாகும் 3 மணி நேரத்தில் தீர்வு.
2) பல்லில் உள்ள புழுக்கள் மடியும்.
3)  பல்லை பிடுங்க வேண்டியதில்லை, Filling செய்ய தேவையில்லை.
4) பல்வலியால் ஏற்படும் தலைவலி, பல்லின் வேர் அடியில் குத்துதல் குணமாகும்.
5) பல்லில் சீல் வைத்தல், நெறி கட்டுதல் குணமாகும்.
6) உள்ளுக்குள்  மருந்து சாப்பிட தேவையில்லை.
7) பல் வலியால் ஏற்படும் வாய் துர்நாற்றம் சரியாகும்.
இவை சித்த மருத்துவம் கற்ற சிலரை இதன் மூலம் குணப்படுத்திய காயத்ரி சொன்ன குறிப்புகள்.நான் இதை சிறிது முயற்சி செய்தேன்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

என் மகள்

என் மகளுக்கு பெயர் சூட்டும் அனுபவத்தை விழியமுதினியன் அப்பன் என்ற வலைபதிவரின் பதிவை படித்த பின் எழுத எண்ணம் வந்ததால் எழுதினேன்
 என் மகள், எல்லாத் தந்தையையும் போல் என்னையும் ஒரு "ஆனந்தத் திமிருடன்" நடக்கச் செய்தவள்;என் மகளுடன்  நான் இருக்கும் பொழுது நான் அடைந்த சந்தோசம்,மன நிறைவு இதுவரையில் நான் அடைந்தது இல்லை.என்னை பூரிப்படைய செய்யும் என் மகள் எனக்கு உயிர்.என் உயிரையும்,உடலையும் ஆக்கபூர்வமாக பயன்படுத்த உதவும் கிரியா ஊக்கி என் மகள்.என் மகள் எனக்கு உழைக்கும் ஆர்வத்தை தரும் ஊற்று.
 எனது முதல் பெண் குழந்தை பிறந்த பொழுது என் மனைவியையே சுற்றி,சுற்றி வருவேன்.எப்பொழுதும் என்னுடனே இருக்கிறீர்கள் என்று டாக்டர் கேட்கிறார் என்று கூறியதால் இறைவனை கும்பிடுவோம் என்று அனலாடீஸ்வரர் கோயில் சென்று கும்பிட்டு பின் மருத்துவமனை சென்றபோது என் மகள் ரோஜா பூ போல் பிறந்து இருந்தாள்.ஆனால் என் மகள் பிறப்பு மேற்கத்திய நாட்டில் நடைமுறையில் உள்ள இளம் சூடான water tub ல் நிகழவேண்டும் என்று appollo மருத்துவமனை டாக்டர்,மற்றும் பல டாக்டர் களை கேட்டேன்.ஆனால் என் ஆசை நிறைவேற மனைவி ஒத்துழைப்பு தராததால்,என் முயற்சி வெற்றிபெற வில்லை. தொட்டியம் ஊரில் பயிற்சி செய்த நாகரத்தினம் என்ற அழகான DGO பெண் மருத்துவரிடம் என் விருப்பதை சொன்னேன்.அவர் அது இங்கே நடைமுறையில் இல்லை என்று என் ஆரவதிற்க்கு ஒத்துழைப்பு தரவில்லை.மகப்பேறு காலத்தில் தினமும் நடைபயிற்சி,மற்றும் கவனமாக இருந்ததால் normal delivery ஆனது. சில நாட்களில் தொட்டியத்தில் மாமனார் வீட்டில் என் மனைவி  இருந்தபோது என் மனைவியுடன் சேர்ந்து ஏதோ எனக்கு இருந்த எனது numerology அறிவு கொண்டு(a.e.rajamanickam book,and internet help,some other book reading) பெயரை தேர்வு செய்து என் மனைவியின் ஒப்புதல் பெற்று அபரஞ்சி என்று வைத்தோம்.ஆ,இ,உ,எ என்ற முதல் எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்ற ஜோதிட குறிப்பின் உதவியுடன் 3 பெயர்கள் தேர்ந்து எடுத்து அவற்றில் ஒன்றான abaranji, abharanji என்ற 2 பெயர்களை தேர்வு செய்து H எழுத்து பெயரில் இருக்கட்டும் என்று என் மாமனாரும் சொன்னதால்,ஆனந்த் என்ற என் பெயரின் முதல் எழுத்து initial உடன். A.ABHARANJI என்ற பெயர் முடிவு செய்யப்பட்டது.அதன் பின் என் மனைவி அவள் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து A.R.ABHARANJI என்று எழுதி கொண்டும், சொல்லிக்கொண்டும் இருந்தாள் .தொட்டியம் பஞ்சாயத்தில் நான் எழுதிக்கொடுக்கும் போது என் மனைவி சொன்னது பெயரை A.ABHARANJI என்று முடிவு செய்தபின்னர் என்பதாலும், numerology பார்க்காமல் மற்றவர்கள் ஒப்புதல் பெறாமல் அவளாக  கூறிக்கொண்டு இருந்ததால் பஞ்சாயத்தில் எழுதிக்கொடுக்கும் போது ஞாபகம் இல்லாததாலும் A.Abharanji என்று என் மகள் பெயர் பதிவு ஆனது. என் பெற்றோர்களுடன் நான் கலந்து ஆலோசிக்கவில்லை.அவர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டனர்.ஏனோ என் பெற்றோர்களையும்,அவர்கள் அறிவுரையையும்,விருப்பத்தையும் கேட்கவேண்டும் என்று எண்ணம் எனக்கு வரவில்லை.நாங்கள் இருவரும் முடிவு செய்து பெயர் வைத்தோம்.அப்பொழுது என்னிடம் மொபைல் போன் இல்லை என் மாமனார் வீட்டு போன் உபயோகிக்கவேண்டாம் என்று என் பெற்றோர்களிடம் ஆலோசனை பெறவில்லை.ஆனால் என் பெற்றோர்கள் ஆசை பட்டு இருப்பார்கள். வருத்தமாக இப்போது இருக்கிறது.
இனிய அனுபவம்.
  
 சரி, பெயரின் சிறப்பு என்ன? சொக்க தங்கத்தை விட பரிசுத்தமான தங்கம்.மன்னர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்த பெயர்.


 முதல் குழந்தை பிறக்கும் முன் என் மனைவியின் உடல் நெருப்பு குண்டம்.தொட்டாலும் என் கைகள் எரியும்.இதை பற்றி கிருஷ்ண மூர்த்தி அய்யர் ஜோதிடரிடம் திருமணதிற்கு முன்னரே ஏன் இவ்வாறு கொதிக்கிறது,என் கைகள் எரிகிறது,ஒருவேளை 5ல் சுக்கிரனும்,சூரியனும் இருப்பதால் இருக்குமா?என்று  கேட்டேன்,அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.அப்பப்பா இப்போ நினைத்தாலும் என்னால் மறக்க முடியாத அனுபவம்.திருமணதிற்கு முன் திரைபடத்திற்கு அழைத்து செல்ல வேண்டினாள்,ஆகையால் திருச்சியில் ஜங்ஷன் அருகில் உள்ள அபிராமி ஹோட்டலில் சாப்பிட்டு கலையரங்கத்தில் ஒரு படம் பார்த்தோம்.அப்பொழுது அவள் என் கைகளை பற்றி அவள் வயிற்றுப்பிரதேசத்தில் ஆசையாக வைத்தாள்.என் கைகள் நெருப்பில் வைத்தமாதிரி  சிறிது நேரத்தில் சுட்டது.என் பெற்றோர்களிடம் என் கை சுடுகிறது,எரிகிறது என்று திருச்சியில் இருந்து துறையூர் வீடு வந்து  சொல்லியும் கேட்கவில்லை.ஆனால் துறையூர் வந்தபிறகும் சுமார் 5மணி நேரம் சென்ற பின்பும் என் கைகள் எரிந்தது.திருமணம் அவளின் தூண்டுதலில் நடைபெற்றது.திருமணதிற்கு பிறகு ஒவ்வொரு முறையும் நெருப்பு குண்டத்தில் படுத்து புரண்டது போல் என் உடல் சூட்டால் அவதிப்படும்.இதை புதுபட்டி செல்வராணியிடம் சொன்னதற்கு நான் அவள் அருகில் படுத்துள்ளேன்,எனக்கு அந்த மாதிரி இல்லை என்று சொன்னார்.அருகில் படுப்பது வேறு,கணவன் படுப்பது வேறு.என் மூத்த மகள் பிறந்த பிறகே அவளின் நெருப்பு உடல் தணிந்தது.ஆனால் அந்த நெருப்பு என் சொத்துகள் பலவற்றை,ஒவ்வொன்றாக ,திறமையாக,நிதானமாக சுருட்டிக்கொண்டுபோய்விட்டது தனி அனுபவம்.ஜோதிடக்கலை நன்கு அறிந்தவர்கள் தாரதோஷம்,மாங்கல்ய தோஷம்,நாக தோஷம்,7ல் குரு,8ல் சனியுடன் ராகு,4ல் தனித்த செவ்வாய்,இரண்டில் கேது போன்றவற்றை வைத்து  இதை விளக்கலாம்..
       
         மிக பல பெரிய பிரச்னைகள்,தற்கொலை முயற்சி போன்றவற்றிக்கு பின்,நான் சதுரகிரி மலை சென்று இறைவனை தரிசித்தபோது என் இரண்டாவது மகள் பிறந்தாள்.  என் இரண்டாவது பெண் குழந்தைக்கு ல,லி,லு.லோ என்ற வரிசையில் பெயர் வைக்க வேண்டும் என்று ஜோதிட குறிப்பு இருந்தது.அப்பொழுது எனக்கு அய்யா செந்தமிழ் வேள்வி சதுரர் மு.பெ.சத்திய வேல் முருகனார் அவர்கள் புத்தகங்கள் நிறைய படித்ததில் முதல் எழுத்து இந்த வரிசையில் தான் இருக்க வேண்டும் என்று ஆரியர்கள் சொன்ன கருத்து ஏற்புடையது அல்ல என்று கூறியிருந்தார்.எனக்கு குழப்பம் அதிக மானது.ஏனென்றால் ஏற்கனவே ஒரு numerology புத்தகத்தில் முதல் எழுத்து ல வரிசையில் இருந்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து படித்து இருந்ததால்  (லலிதா,லதா என்று இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்காது.) என்னால் உறுதியாக என்ன பெயர் என்று முடிவெடுக்க முடியாமல் அய்யா மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களிடமே phone மூலமாகவும், வள்ளி மலை கிரி வலத்தின் போது நேரிலும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்று பெயர் வைக்க வேண்டினேன்.அய்யா அவர்களும் உலக நாயகி,லோக ரஞ்சனி,லோக நாயகி என பின்னர் phoneல் பரிந்துரை செய்தார்.என் மனைவி முடியவே முடியாது என் தோழி உலக நாயகி என்று இருந்தாள் நல்ல அழகு,அறிவு,நன்றாக படித்து,முதல் மதிப்பெண் வாங்குவாள், ஆனால் திமிர் பிடித்தவள்,என்னை மதிக்க மாட்டாள், அவளை எனக்கு பிடிக்காது.அதனால் அந்த பெயர் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.நான் அழகானவர்,அறிவானவர்,முதல் மதிப்பெண் எடுத்தவர் பெயரை வைப்பது நல்லது தானே என்று வாதம் செய்தேன்,அந்த பெயருக்கு வக்காலத்து வாங்கினேன்,ஆனால் என் மனைவி தூண்டுதலால் என் மூத்த மகள் என்ன அப்பா பெயர் வைக்கிறீர்கள்? நாய் என்று வருகிறது என்று என்னை கிண்டல் செய்ததால்,என் மூத்த மகளை என் மனைவி என்னை கிண்டல் அடிக்க பழக்க படுத்தி மாற்றிவிட்டதால்,என் மகளுக்கு சொல்லி புரியவைக்க என் மனைவி அனுமதி தராமல்,கறார்காட்டியதால் என் முயற்சியில் தோல்வி அடைந்தேன்.என் பெற்றோர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.மருமகளை எதிர்த்து மூச்சு கூட விட கூடாது என்று பயப்படும் கோழைகள்.அதனால் தோல்வி நிலையில் அலைந்துகொண்டு இருந்தபோது சென்னையில் airtel அலுவலகத்தில் பணி புரிந்ததால்  ஸ்ரீ ரெட்டியப்பட்டி சுவாமிகள் அவர்களின் சென்னை தியாகராய நகரில் உள்ள வாசக சாலை,மற்றும் கோயில் கட்டிக்கொண்டிருந்த மூர்த்தி  iyer குடும்பத்தவர்கள் நல்ல பழக்கம் ஏற்பட்டது.வாசக சாலையில் ரெட்டியபட்டி சாமிகள் பற்றி அறிந்து மகிழ்ந்து அருள் சட்டம் ஏற்று  நானும் ரெடியப்பட்டி சுவாமிகளை பின் பற்றியதாலும் அவர்களிடம் பெயர் வைக்க அருள் சக்தி அன்னை ஆஷ்ரமம்,பிள்ளையார் குப்பம் சென்று பூஜை செய்து வழிபட்டு சென்னை திரும்பி வரும் பொழுது வேண்டினேன்.அவர்கள் லட்சுமி என்று வைக்கலாம். மிக நல்ல பெயர் என்று பரிந்துரைத்தனர்.என் மனைவி மிக பழைய பெயர் நல்லா இல்லை என்று மறுத்தாள். நான் பெயர் பரிந்துரை செய்பவர்கள் மிக சக்தி வாய்ந்தவர்கள்.நல்ல ஆன்மிக அனுபவம் உள்ளவர்கள் என்று அவர்களின் பெருமைகளை சொன்னேன்.ஆனால் என் மனைவி ஏற்றுக்கொள்ள வில்லை.ஆகையால் ஒரு ஜோதிடரை என் அம்மா வரவழைத்தார்,எங்களிடம் கடன் வாங்கியவர்கள் நல்ல ஜோதிடர்,மிக நன்றாக சொல்வார் என்று அறிவுறுத்தியதால்,அந்த  ஆலோசனை படி விஜய்ஜோதிடரை வரவழைத்து பெயர் முடிவு குறித்து ஆலோசனை செய்து சிவரஞ்சனி என்று என் பெற்றோர்கள்,மனைவி,உறவினர்கள் நானும் உடன்பட்டு முடிவு எடுத்து பெயர் சூட்டு விழாவில் சிவரஞ்சனி என்று பெயர் வைத்து தேன் என் மகளின் நாக்கில் வைத்து,காதில் சிவரஞ்சனி,சிவரஞ்சனி என்று ஒவ்வொருவராக சென்று பெயர் சொல்லி வைத்தனர்.பின் என் மனைவி யாரிடமும் சொல்லாமல்,ஆலோசனை கேட்காமல்  லோசனா என்ற பெயர் மாடர்ன் ஆக உள்ளது என்று அந்த பெயரை வைத்தாள்.என் முதல் பெண்ணும் அம்மாவிற்கே சப்போர்ட் செய்ததால் certificateல் a.loshana என்ற பெயர் எங்களுக்கு தெரியாமல் பதிவு ஆனது.
நெருடலான அனுபவம்.
என் மகளுக்கு பெயர் சூட்டும் அனுபவத்தை விழியமுதினியன் அப்பன் என்ற வலைபதிவரின் பதிவை படித்த பின் எழுத எண்ணம் வந்ததால் எழுதினேன்.என் மகள்களும் தெரிந்து கொள்ளட்டும் என்று எழுதினேன்.ஆனால் அவர்கள் இதை படிப்பார்கள் என்று எப்படி தெரியும்.யாரேனும் இதை படித்து என் மகள்களிடம் இன்றைய சூழலில் சொல்லவேண்டும்.காலம் என்ன செய்யபோகிறது, என் மகள்கள் என்னுடைய சொத்து, என்னிடமே வளர வேண்டும் என்ற எனது வேண்டுகோளை இறைவனும், திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர்,முக நூல் அன்பர்கள்,குடியரசு தலைவர்,legal aid,chennai high court registrar,சமூக நல துறை போன்றவர்கள் என் விண்ணபத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்,என் மகள்களை என்னிடம் சேர்க்கவேண்டும்.அன்றே என் உயிர் புத்துணர்ச்சியுடன் செயல்படும்.மகள்களை பெற்ற அப்பன்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேராது என்று தொடங்கி வரும் ஆனந்த யாழை மீட்டுகிராய் என்ற தங்க மீன்கள் திரைப்பட பாடலும்,ஆரிரோ,ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு என்ற தெய்வ திருமகள் பாடலும் என்னை நெஞ்சமெல்லாம் ஊடுருவி,நிலைகொள்ளாமல் பரிதவிக்கவைத்து, உயிரை உருகவைத்து அழுகை வர வைத்த ,நெஞ்சை அடைத்த எனக்கு மட்டுமே தெரிந்த அனுபவ நிகழ்வு.நான் அழுவதும்,தொழுவதும்,மக்களுக்கு வேடிக்கையாக,விநோதமாக,என்னை பார்த்து அழிக்கும் காரணியாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.எல்லாம் ஜாதக கோளாறு. என்னை திட்டமிட்டு சேர்ந்த சதியின் வினை.சதியை பெற்ற பெற்றோர்கள் ஊரை ஏமாற்றியே பிழைக்கின்றனர்.மரணத்தை தழுவியவனின் மரண வாக்கு மூலம் போல் இது,நான் மறுபிறவி எடுத்தாலும் மக்கள் தெரிந்துகொள்ள ஜோதிடம் பற்றி அறிந்து கொள்ள,பெண்களால் ஏற்படும் துயரங்கள்,ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே என்ற அனுபவ சொல் வழக்கின் விளக்கமாக,ஔவையார் சொன்ன கொடிது 
கொடியது
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது, (இந்த கொடுமையை இறைவன் என் தாய்,தந்தைக்கு பிள்ளையாய் பிறந்ததால் தரவில்லை.)
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய் (இந்த கொடுமையும் இறைவன் தரவில்லை.)
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர் (இந்த கொடுமையை இறைவன் என் மனைவி என்ற பெண்ணை அறிமுகபடுத்தி தொடங்கிவைத்தன்)
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே(மிக அதிக பட்ச கொடுமையான இந்த கொடுமையை தந்து,ஏழைகள் சந்தோசமாக குடும்பம் நடத்துவதையும்,பிள்ளைகளுடன் அன்பாக இருபதையும் பார்த்து ஏக்கம் தந்து முதல் கொடுமையையும் சேர்த்து அனுபவிக்க வைக்கிறான்.)
,கொடியது என்ற கருத்தின் விளக்க பாடமாக என் வாழ்க்கை. .ஆகவே
 ஜாதக பொருத்தம் கண்டிப்பாக ஹிந்து திருமணங்களில் பின்பற்றவேண்டும்.அரைகுறை ஜோதிடர்களிடம் சிக்கி கொள்ளாமல்,ஒருவருக்கு இருவர் என்று பலரிடம் நல்ல திறமையான ஜோதிடர்களிடம் ஆலோசனைகள் கேட்டு பின் திருமணம் செய்தால் என்னை போன்று துன்பம் இல்லாமல்,நன்றாக இருக்கலாம். கல்யாணத்திற்கு முன் பெண்கள் பாசம் காட்டினால் ஜாதக பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்றுகொள்ளவே கூடாது. நலம்.