வியாழன், 18 ஏப்ரல், 2013

என் மகள்

என் மகளுக்கு பெயர் சூட்டும் அனுபவத்தை விழியமுதினியன் அப்பன் என்ற வலைபதிவரின் பதிவை படித்த பின் எழுத எண்ணம் வந்ததால் எழுதினேன்
 என் மகள், எல்லாத் தந்தையையும் போல் என்னையும் ஒரு "ஆனந்தத் திமிருடன்" நடக்கச் செய்தவள்;என் மகளுடன்  நான் இருக்கும் பொழுது நான் அடைந்த சந்தோசம்,மன நிறைவு இதுவரையில் நான் அடைந்தது இல்லை.என்னை பூரிப்படைய செய்யும் என் மகள் எனக்கு உயிர்.என் உயிரையும்,உடலையும் ஆக்கபூர்வமாக பயன்படுத்த உதவும் கிரியா ஊக்கி என் மகள்.என் மகள் எனக்கு உழைக்கும் ஆர்வத்தை தரும் ஊற்று.
 எனது முதல் பெண் குழந்தை பிறந்த பொழுது என் மனைவியையே சுற்றி,சுற்றி வருவேன்.எப்பொழுதும் என்னுடனே இருக்கிறீர்கள் என்று டாக்டர் கேட்கிறார் என்று கூறியதால் இறைவனை கும்பிடுவோம் என்று அனலாடீஸ்வரர் கோயில் சென்று கும்பிட்டு பின் மருத்துவமனை சென்றபோது என் மகள் ரோஜா பூ போல் பிறந்து இருந்தாள்.ஆனால் என் மகள் பிறப்பு மேற்கத்திய நாட்டில் நடைமுறையில் உள்ள இளம் சூடான water tub ல் நிகழவேண்டும் என்று appollo மருத்துவமனை டாக்டர்,மற்றும் பல டாக்டர் களை கேட்டேன்.ஆனால் என் ஆசை நிறைவேற மனைவி ஒத்துழைப்பு தராததால்,என் முயற்சி வெற்றிபெற வில்லை. தொட்டியம் ஊரில் பயிற்சி செய்த நாகரத்தினம் என்ற அழகான DGO பெண் மருத்துவரிடம் என் விருப்பதை சொன்னேன்.அவர் அது இங்கே நடைமுறையில் இல்லை என்று என் ஆரவதிற்க்கு ஒத்துழைப்பு தரவில்லை.மகப்பேறு காலத்தில் தினமும் நடைபயிற்சி,மற்றும் கவனமாக இருந்ததால் normal delivery ஆனது. சில நாட்களில் தொட்டியத்தில் மாமனார் வீட்டில் என் மனைவி  இருந்தபோது என் மனைவியுடன் சேர்ந்து ஏதோ எனக்கு இருந்த எனது numerology அறிவு கொண்டு(a.e.rajamanickam book,and internet help,some other book reading) பெயரை தேர்வு செய்து என் மனைவியின் ஒப்புதல் பெற்று அபரஞ்சி என்று வைத்தோம்.ஆ,இ,உ,எ என்ற முதல் எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்ற ஜோதிட குறிப்பின் உதவியுடன் 3 பெயர்கள் தேர்ந்து எடுத்து அவற்றில் ஒன்றான abaranji, abharanji என்ற 2 பெயர்களை தேர்வு செய்து H எழுத்து பெயரில் இருக்கட்டும் என்று என் மாமனாரும் சொன்னதால்,ஆனந்த் என்ற என் பெயரின் முதல் எழுத்து initial உடன். A.ABHARANJI என்ற பெயர் முடிவு செய்யப்பட்டது.அதன் பின் என் மனைவி அவள் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து A.R.ABHARANJI என்று எழுதி கொண்டும், சொல்லிக்கொண்டும் இருந்தாள் .தொட்டியம் பஞ்சாயத்தில் நான் எழுதிக்கொடுக்கும் போது என் மனைவி சொன்னது பெயரை A.ABHARANJI என்று முடிவு செய்தபின்னர் என்பதாலும், numerology பார்க்காமல் மற்றவர்கள் ஒப்புதல் பெறாமல் அவளாக  கூறிக்கொண்டு இருந்ததால் பஞ்சாயத்தில் எழுதிக்கொடுக்கும் போது ஞாபகம் இல்லாததாலும் A.Abharanji என்று என் மகள் பெயர் பதிவு ஆனது. என் பெற்றோர்களுடன் நான் கலந்து ஆலோசிக்கவில்லை.அவர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டனர்.ஏனோ என் பெற்றோர்களையும்,அவர்கள் அறிவுரையையும்,விருப்பத்தையும் கேட்கவேண்டும் என்று எண்ணம் எனக்கு வரவில்லை.நாங்கள் இருவரும் முடிவு செய்து பெயர் வைத்தோம்.அப்பொழுது என்னிடம் மொபைல் போன் இல்லை என் மாமனார் வீட்டு போன் உபயோகிக்கவேண்டாம் என்று என் பெற்றோர்களிடம் ஆலோசனை பெறவில்லை.ஆனால் என் பெற்றோர்கள் ஆசை பட்டு இருப்பார்கள். வருத்தமாக இப்போது இருக்கிறது.
இனிய அனுபவம்.
  
 சரி, பெயரின் சிறப்பு என்ன? சொக்க தங்கத்தை விட பரிசுத்தமான தங்கம்.மன்னர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்த பெயர்.


 முதல் குழந்தை பிறக்கும் முன் என் மனைவியின் உடல் நெருப்பு குண்டம்.தொட்டாலும் என் கைகள் எரியும்.இதை பற்றி கிருஷ்ண மூர்த்தி அய்யர் ஜோதிடரிடம் திருமணதிற்கு முன்னரே ஏன் இவ்வாறு கொதிக்கிறது,என் கைகள் எரிகிறது,ஒருவேளை 5ல் சுக்கிரனும்,சூரியனும் இருப்பதால் இருக்குமா?என்று  கேட்டேன்,அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.அப்பப்பா இப்போ நினைத்தாலும் என்னால் மறக்க முடியாத அனுபவம்.திருமணதிற்கு முன் திரைபடத்திற்கு அழைத்து செல்ல வேண்டினாள்,ஆகையால் திருச்சியில் ஜங்ஷன் அருகில் உள்ள அபிராமி ஹோட்டலில் சாப்பிட்டு கலையரங்கத்தில் ஒரு படம் பார்த்தோம்.அப்பொழுது அவள் என் கைகளை பற்றி அவள் வயிற்றுப்பிரதேசத்தில் ஆசையாக வைத்தாள்.என் கைகள் நெருப்பில் வைத்தமாதிரி  சிறிது நேரத்தில் சுட்டது.என் பெற்றோர்களிடம் என் கை சுடுகிறது,எரிகிறது என்று திருச்சியில் இருந்து துறையூர் வீடு வந்து  சொல்லியும் கேட்கவில்லை.ஆனால் துறையூர் வந்தபிறகும் சுமார் 5மணி நேரம் சென்ற பின்பும் என் கைகள் எரிந்தது.திருமணம் அவளின் தூண்டுதலில் நடைபெற்றது.திருமணதிற்கு பிறகு ஒவ்வொரு முறையும் நெருப்பு குண்டத்தில் படுத்து புரண்டது போல் என் உடல் சூட்டால் அவதிப்படும்.இதை புதுபட்டி செல்வராணியிடம் சொன்னதற்கு நான் அவள் அருகில் படுத்துள்ளேன்,எனக்கு அந்த மாதிரி இல்லை என்று சொன்னார்.அருகில் படுப்பது வேறு,கணவன் படுப்பது வேறு.என் மூத்த மகள் பிறந்த பிறகே அவளின் நெருப்பு உடல் தணிந்தது.ஆனால் அந்த நெருப்பு என் சொத்துகள் பலவற்றை,ஒவ்வொன்றாக ,திறமையாக,நிதானமாக சுருட்டிக்கொண்டுபோய்விட்டது தனி அனுபவம்.ஜோதிடக்கலை நன்கு அறிந்தவர்கள் தாரதோஷம்,மாங்கல்ய தோஷம்,நாக தோஷம்,7ல் குரு,8ல் சனியுடன் ராகு,4ல் தனித்த செவ்வாய்,இரண்டில் கேது போன்றவற்றை வைத்து  இதை விளக்கலாம்..
       
         மிக பல பெரிய பிரச்னைகள்,தற்கொலை முயற்சி போன்றவற்றிக்கு பின்,நான் சதுரகிரி மலை சென்று இறைவனை தரிசித்தபோது என் இரண்டாவது மகள் பிறந்தாள்.  என் இரண்டாவது பெண் குழந்தைக்கு ல,லி,லு.லோ என்ற வரிசையில் பெயர் வைக்க வேண்டும் என்று ஜோதிட குறிப்பு இருந்தது.அப்பொழுது எனக்கு அய்யா செந்தமிழ் வேள்வி சதுரர் மு.பெ.சத்திய வேல் முருகனார் அவர்கள் புத்தகங்கள் நிறைய படித்ததில் முதல் எழுத்து இந்த வரிசையில் தான் இருக்க வேண்டும் என்று ஆரியர்கள் சொன்ன கருத்து ஏற்புடையது அல்ல என்று கூறியிருந்தார்.எனக்கு குழப்பம் அதிக மானது.ஏனென்றால் ஏற்கனவே ஒரு numerology புத்தகத்தில் முதல் எழுத்து ல வரிசையில் இருந்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து படித்து இருந்ததால்  (லலிதா,லதா என்று இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்காது.) என்னால் உறுதியாக என்ன பெயர் என்று முடிவெடுக்க முடியாமல் அய்யா மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களிடமே phone மூலமாகவும், வள்ளி மலை கிரி வலத்தின் போது நேரிலும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்று பெயர் வைக்க வேண்டினேன்.அய்யா அவர்களும் உலக நாயகி,லோக ரஞ்சனி,லோக நாயகி என பின்னர் phoneல் பரிந்துரை செய்தார்.என் மனைவி முடியவே முடியாது என் தோழி உலக நாயகி என்று இருந்தாள் நல்ல அழகு,அறிவு,நன்றாக படித்து,முதல் மதிப்பெண் வாங்குவாள், ஆனால் திமிர் பிடித்தவள்,என்னை மதிக்க மாட்டாள், அவளை எனக்கு பிடிக்காது.அதனால் அந்த பெயர் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.நான் அழகானவர்,அறிவானவர்,முதல் மதிப்பெண் எடுத்தவர் பெயரை வைப்பது நல்லது தானே என்று வாதம் செய்தேன்,அந்த பெயருக்கு வக்காலத்து வாங்கினேன்,ஆனால் என் மனைவி தூண்டுதலால் என் மூத்த மகள் என்ன அப்பா பெயர் வைக்கிறீர்கள்? நாய் என்று வருகிறது என்று என்னை கிண்டல் செய்ததால்,என் மூத்த மகளை என் மனைவி என்னை கிண்டல் அடிக்க பழக்க படுத்தி மாற்றிவிட்டதால்,என் மகளுக்கு சொல்லி புரியவைக்க என் மனைவி அனுமதி தராமல்,கறார்காட்டியதால் என் முயற்சியில் தோல்வி அடைந்தேன்.என் பெற்றோர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.மருமகளை எதிர்த்து மூச்சு கூட விட கூடாது என்று பயப்படும் கோழைகள்.அதனால் தோல்வி நிலையில் அலைந்துகொண்டு இருந்தபோது சென்னையில் airtel அலுவலகத்தில் பணி புரிந்ததால்  ஸ்ரீ ரெட்டியப்பட்டி சுவாமிகள் அவர்களின் சென்னை தியாகராய நகரில் உள்ள வாசக சாலை,மற்றும் கோயில் கட்டிக்கொண்டிருந்த மூர்த்தி  iyer குடும்பத்தவர்கள் நல்ல பழக்கம் ஏற்பட்டது.வாசக சாலையில் ரெட்டியபட்டி சாமிகள் பற்றி அறிந்து மகிழ்ந்து அருள் சட்டம் ஏற்று  நானும் ரெடியப்பட்டி சுவாமிகளை பின் பற்றியதாலும் அவர்களிடம் பெயர் வைக்க அருள் சக்தி அன்னை ஆஷ்ரமம்,பிள்ளையார் குப்பம் சென்று பூஜை செய்து வழிபட்டு சென்னை திரும்பி வரும் பொழுது வேண்டினேன்.அவர்கள் லட்சுமி என்று வைக்கலாம். மிக நல்ல பெயர் என்று பரிந்துரைத்தனர்.என் மனைவி மிக பழைய பெயர் நல்லா இல்லை என்று மறுத்தாள். நான் பெயர் பரிந்துரை செய்பவர்கள் மிக சக்தி வாய்ந்தவர்கள்.நல்ல ஆன்மிக அனுபவம் உள்ளவர்கள் என்று அவர்களின் பெருமைகளை சொன்னேன்.ஆனால் என் மனைவி ஏற்றுக்கொள்ள வில்லை.ஆகையால் ஒரு ஜோதிடரை என் அம்மா வரவழைத்தார்,எங்களிடம் கடன் வாங்கியவர்கள் நல்ல ஜோதிடர்,மிக நன்றாக சொல்வார் என்று அறிவுறுத்தியதால்,அந்த  ஆலோசனை படி விஜய்ஜோதிடரை வரவழைத்து பெயர் முடிவு குறித்து ஆலோசனை செய்து சிவரஞ்சனி என்று என் பெற்றோர்கள்,மனைவி,உறவினர்கள் நானும் உடன்பட்டு முடிவு எடுத்து பெயர் சூட்டு விழாவில் சிவரஞ்சனி என்று பெயர் வைத்து தேன் என் மகளின் நாக்கில் வைத்து,காதில் சிவரஞ்சனி,சிவரஞ்சனி என்று ஒவ்வொருவராக சென்று பெயர் சொல்லி வைத்தனர்.பின் என் மனைவி யாரிடமும் சொல்லாமல்,ஆலோசனை கேட்காமல்  லோசனா என்ற பெயர் மாடர்ன் ஆக உள்ளது என்று அந்த பெயரை வைத்தாள்.என் முதல் பெண்ணும் அம்மாவிற்கே சப்போர்ட் செய்ததால் certificateல் a.loshana என்ற பெயர் எங்களுக்கு தெரியாமல் பதிவு ஆனது.
நெருடலான அனுபவம்.
என் மகளுக்கு பெயர் சூட்டும் அனுபவத்தை விழியமுதினியன் அப்பன் என்ற வலைபதிவரின் பதிவை படித்த பின் எழுத எண்ணம் வந்ததால் எழுதினேன்.என் மகள்களும் தெரிந்து கொள்ளட்டும் என்று எழுதினேன்.ஆனால் அவர்கள் இதை படிப்பார்கள் என்று எப்படி தெரியும்.யாரேனும் இதை படித்து என் மகள்களிடம் இன்றைய சூழலில் சொல்லவேண்டும்.காலம் என்ன செய்யபோகிறது, என் மகள்கள் என்னுடைய சொத்து, என்னிடமே வளர வேண்டும் என்ற எனது வேண்டுகோளை இறைவனும், திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர்,முக நூல் அன்பர்கள்,குடியரசு தலைவர்,legal aid,chennai high court registrar,சமூக நல துறை போன்றவர்கள் என் விண்ணபத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்,என் மகள்களை என்னிடம் சேர்க்கவேண்டும்.அன்றே என் உயிர் புத்துணர்ச்சியுடன் செயல்படும்.மகள்களை பெற்ற அப்பன்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேராது என்று தொடங்கி வரும் ஆனந்த யாழை மீட்டுகிராய் என்ற தங்க மீன்கள் திரைப்பட பாடலும்,ஆரிரோ,ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு என்ற தெய்வ திருமகள் பாடலும் என்னை நெஞ்சமெல்லாம் ஊடுருவி,நிலைகொள்ளாமல் பரிதவிக்கவைத்து, உயிரை உருகவைத்து அழுகை வர வைத்த ,நெஞ்சை அடைத்த எனக்கு மட்டுமே தெரிந்த அனுபவ நிகழ்வு.நான் அழுவதும்,தொழுவதும்,மக்களுக்கு வேடிக்கையாக,விநோதமாக,என்னை பார்த்து அழிக்கும் காரணியாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.எல்லாம் ஜாதக கோளாறு. என்னை திட்டமிட்டு சேர்ந்த சதியின் வினை.சதியை பெற்ற பெற்றோர்கள் ஊரை ஏமாற்றியே பிழைக்கின்றனர்.மரணத்தை தழுவியவனின் மரண வாக்கு மூலம் போல் இது,நான் மறுபிறவி எடுத்தாலும் மக்கள் தெரிந்துகொள்ள ஜோதிடம் பற்றி அறிந்து கொள்ள,பெண்களால் ஏற்படும் துயரங்கள்,ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே என்ற அனுபவ சொல் வழக்கின் விளக்கமாக,ஔவையார் சொன்ன கொடிது 
கொடியது
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது, (இந்த கொடுமையை இறைவன் என் தாய்,தந்தைக்கு பிள்ளையாய் பிறந்ததால் தரவில்லை.)
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய் (இந்த கொடுமையும் இறைவன் தரவில்லை.)
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர் (இந்த கொடுமையை இறைவன் என் மனைவி என்ற பெண்ணை அறிமுகபடுத்தி தொடங்கிவைத்தன்)
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே(மிக அதிக பட்ச கொடுமையான இந்த கொடுமையை தந்து,ஏழைகள் சந்தோசமாக குடும்பம் நடத்துவதையும்,பிள்ளைகளுடன் அன்பாக இருபதையும் பார்த்து ஏக்கம் தந்து முதல் கொடுமையையும் சேர்த்து அனுபவிக்க வைக்கிறான்.)
,கொடியது என்ற கருத்தின் விளக்க பாடமாக என் வாழ்க்கை. .ஆகவே
 ஜாதக பொருத்தம் கண்டிப்பாக ஹிந்து திருமணங்களில் பின்பற்றவேண்டும்.அரைகுறை ஜோதிடர்களிடம் சிக்கி கொள்ளாமல்,ஒருவருக்கு இருவர் என்று பலரிடம் நல்ல திறமையான ஜோதிடர்களிடம் ஆலோசனைகள் கேட்டு பின் திருமணம் செய்தால் என்னை போன்று துன்பம் இல்லாமல்,நன்றாக இருக்கலாம். கல்யாணத்திற்கு முன் பெண்கள் பாசம் காட்டினால் ஜாதக பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்றுகொள்ளவே கூடாது. நலம்.